சனி, ஜனவரி 07, 2006

ஆயுளின் அந்தி வரை

நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்

வானவில் கொடுத்து
மழை தூவிவிட்டது

மனிதர்களிடம்
காண்பித்தேன்

கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

Its a nice kavithai.
oru padaipaalliyin valiyai vivarikkum kavithai

நண்பன் சொன்னது…

மிக்க நன்றி தேவ்.

மற்ற கவிதைகளையும் படித்து விடுங்கள்.

அன்புடன்
நண்பன்

திருவாரூர் சரவணா சொன்னது…

வாசிப்பின் மகத்துவம் புரியாமல் பலர் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சட்டக் கல்லூரி சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்ட மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்,அவர்களை நூலகத்தில் படிக்கச் சொல்லி கட்டளை பிறப்பித்துள்ளது.

வாசிப்பின் மகத்துவத்தை நீதித் துறை உணர்ந்திருப்பதால்தான் இப்படி ஒரு உத்தரவு.வீடியோ கேம்,கார்ட்டூன் சேனல் என்று நம் குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சத்தை சுருக்கி அவர்களின் மனதை பொலிவிழக்கச் செய்ததை இனியாவது தவிர்த்து அவர்களை பண்புள்ளவர்களாகச் செய்ய வேண்டியது நம் கடமை.

வாசிப்பு என்றால் புத்தகம் படிப்பது மட்டும் அல்ல.

நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளையும் மனிதர்களையும் நமக்கு கிடைக்கும் அனுபவங்களையும் சுவாசத்தைப் போல் நேசித்தால் எளிமையான தீர்வுகள் கிடைக்கும்.தவறுகளை அடுத்தவர்கள் சுட்டிக் காட்டாமலேயே உணரக் கூட பல நேரங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

அடுத்த தலைமுறையை அற்புதமாக உருவாக்க முயற்சி செய்வோமா?