வெள்ளி, டிசம்பர் 09, 2011

கார்த்திகைச் சுடர்கள் !



திகுதிகு திகுவென
சேர்ந்துத் தீமூட்டி
செகத்தார்
எரித்து முடித்த
எம்
வெந்த காட்டுக்குள்
கிடக்கும்
வேகாத
முட்டைகளுடைத்து
வெளிவருகின்றன
கார்த்திகைச்
சுடர்கள்!

துயிலும் பிள்ளைகளின்
தூங்காத
கனவுறிஞ்சி
நெடுநெடென
நிமிர்ந்தெழுந்தப்
பால
மரங்களெல்லாம்
பதறி
அழ
பதறி
அழ
இடங்கள் சிதைத்து
எலும்புகள் சிதைத்து
எம்
வீரர்
விளைநிலத்தை
வெம்பரப்பாய்ச்
செய்த
பின்னும்
கணினிக்குள் கருத்தோடு
கட்டிவைத்தத்
துயிலுமிடம்
பொறுப்போடு
தேடி
புதைத்துவைத்த
வன்மத்தைப்
புத்திக்குள்
மீட்டெடுத்துப்
புலம் பெயர்ந்த
உறவெல்லாம்
நம்பிக்கை
அகல்
கொளுத்த
நம்பிக்கை
அகல்
கொளுத்த
எரியும் சுடர்களின்
ஏராள
ஒளி
கூடி
உரக்க
உச்சரிக்கின்றன...

''எங்கள்
ஈகம்
அணையாது
எங்கள்
தாகம்
தணியாது!''

நன்றி: விகடன்

செவ்வாய், ஜூலை 12, 2011

பேரறிஞன் என்கிற சொல்லை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.

ஆனால் வேரறிஞன் என்கிற சொல்லைக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

கவிஞர் அறிவுமதி.



ஆழத் தமிழுக்குள்

ஆய்வுப் பணிக்காக

மூழ்கி

முக்குளித்த

மூத்த தமிழ் பேரறிஞன்!

இலக்கணங்கள் இலக்கியங்கள்

எதற்கும்

குறிப்பின்றி

உடனுக்குடன் இங்கே

ஊற்றறிவில்

புதுமை சொல்லும்

உயர்த் தமிழின் வேரறிஞன்!

பண்பாட்டு விழுமியங்கள்

பக்திப்

பொருண்மியங்கள்

நாடகங்கள்

திரைப்படங்கள்

என அனைத்துக் கிளைகளிலும்

அடுக்கெடுத்துப்

பூத்த மகன்!

ஆண்டாண்டு காலமிங்கே

அழுக்கேறிக்

கிடந்த

தமிழ் இழுக்கை

துடைத்தெறிந்து

ஈடற்ற மொழியென்றால்

அது

என்றும்

தமிழ் என்றே

ஆய்வறிஞர்

ஆம்

சொல்ல

ஆதாரம் பல தந்து

அருந்

தமிழைக்

காத்த

மகன்!

மூடி வைத்த நூலகம் போல்

மூச்சிழந்து தூங்குகிறார்!

மொத்த தமிழ்

ஆய்வுலகும்

பேச்சின்றித்

தேம்புகிறார்!

ஐயா சிவத்தம்பி!

அன்னைத்

தமிழுக்கு

உம் உழைப்பு

பேருழைப்பு!

ஐயோ... உலகத்து

அனைத்துத் தமிழர்க்கும்

உம் இழப்பு பேரிழப்பு!

செவ்வாய், ஜூன் 07, 2011

அது ஒரு மீன் காலம் !


அது ஒரு மீன் காலம் !

'கள்ளக்குறிச்சிக்கும் மேற்கே... வெள்ளி மலை யில் இருந்து இறங்கி வருவது மணிமுத்தா ஆறு. விருத்தாசலத்துக்கு அருகில் அதன் வடகரையில் அமைந்து உள்ள ஊர்களில் ஒன்றுதான் என் தொட்டில் மண்... சு.கீணனூர்.

என் 16 வயது வரையிலும் மீன்களை விலை கொடுத்து வாங்கி உண்ணாதவர்கள் என் ஊர் மக்கள்.

ஆறு, ஏரி, பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால், விளா மரத்துக் குட்டை, கலுங்குப் பள்ளம், கல்லாம்பத்தி மடு என ஆண்டு முழுக்கத் தண்ணீர் புழக்கம் உள்ள ஊராக அழகுற அமைந்திருக்கும்!

குதிகாலால் அழுந்த அழுத்திவிட்டாலே, தண்ணீர் ஊற்று எடுக்கும் ஊத்தங்கால் பகுதியில் 'மடுமுழுங்கி நெல்’ விளைந்த மண் என் மண்.

தலைக்கு எண்ணெய் வைத்த பெண்ணின் தலையில்... வடிகஞ்சியைத் தேய்த்து ஆற்றின் குளியல் துறையில் மல்லாக்க மிதக்கவிட்டு மற்ற பெண்கள் அப்பெண்ணின் கூந்தலை அலசிவிடுகை யில், இன்னொரு பெண்ணின் முந்தானையால் அங்கே மொய்க்கும் மீன்களை அள்ளினால் அன்று அங்கே குளிக்க வந்த அத்தனைப் பெண்கள் வீட்டி லும் மீன்குழம்புதான்.

ஆற்றங்கரையில்தான் சு.கீணனூர் என்றாலும், புன்செய் பயிர்களே அதிகம். வரகு, சோளம், மல்லாட்ட, துவரை, நரிப் பயிறு, செப்பயிறு, தட்டைப் பயிறு, பச்சைப் பயிறு, உளுந்து, மொச்சை, கொட்டமுத்து என எல்லாவிதமான தானியங்களும், எம் மூத்தோர்களின் காய்ப்பு காய்த்த கைகளின் உழைப்பால் காய்த்து மகிழ்ந்த ஊர்.

நடவு நடுகிற போதோ, களை எடுக்கிறபோதோ, அறுவடை செய்கிறபோதோ, அழுகிற குழந்தையை யார் முதலில் தூக்குகிறார்களோ... அவர்களின் மார் பில் பால் குடித்துப் பசியாறியவர்கள் நாங்கள். அதனால் புன் செய்க்காட்டின் அம்மாக்கள் அனை வருமே எங்கள் அம்மாக்கள்.

தாலாட்டு, தெம்மாங்கு, கும்மி, நலுங்கு, ஒப்பாரி, சடுகுடு, ஆறாள் பாரி, எட்டாள் பாரி, கிட்டிப்புள் என வாழ்க்கை வழி நெடுகிலும் பாடல்களாய்ப் பூத்துப் பூத்துச் செழித்தது என் ஊர்.

அடைமழைக் காலத்தில் வெள்ளம் புரண்டு வருகிறபோது, கீணனூர் ஒரு தீவாகிவிடும். உள்ளி ருந்து வெளியே... வெளியில் இருந்து உள்ளே இரண்டு மூன்று நாட்களுக்கு யாரும் யாரோடும் தொடர்பு கொள்ள முடியாது.

இப்படி... தண்ணீரையே மாலையாக அணிந்து மகிழ்ந்து இருந்த என் ஊருக்கு ஏழெட்டு கல் தொலைவில்தான்... அதோ அந்த... நெய்வேலி!

60, 70 ஊர்களை அப்புறப்படுத்திவிட்டு... 200 அடி ஆழத்துக்கும் மேலாக... வெடி வைத்துத் தகர்த் துத்... தோண்டி தோண்டி... நிலக்கரி எடுத்தபடி... ராட்சசக் கருவிகள் எம் திசை நோக்கியும் முன்னேறிக்கொண்டு இருக்கின்றன.

கடல் தண்ணீரும் உள்ளே வந்துவிடாமல், நிலத் தடி நீரும் நிரம்பிவிடாமல் இருக்கும்படியான எச்சரிக்கையில் தோண்டுகிறபோது, இரண்டு ஆற் றுத் தண்ணீரை நிலத்தடியில் இருந்து இடைவிடாமல் உறிஞ்சி வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது நெய்வேலி. 250 அடி ஆழத்துக்கும் கீழே போய் எம் பயிர்களுக்குத் தண்ணீர் தேட வேண்டிய வாழ்க்கை யாகிவிட்டது என் கீணனூர் வாழ்க்கை.

யார் யாருக்கோ வெளிச்சம் தருகிற நெய்வேலி, என் ஊருக்கும் என் ஊரைச் சுற்றிய தொழூர், கம்மாபுரம், கோபாலபுரம், கீழப்பாளையூர், மேலப்பாளையூர், புத்தூர், குமாரமங்கலம், விளக்கப்பாடி, சிறுவரப்பூர், பெருவரப்பூர், சின்ன கோட்டிமுளை, பெரிய கோட்டிமுளை, முதனை என ஏராளமான ஊர்களுக்கும் இருட்டைத் தந்து விட்ட சோகம் எத்தனை பேருக்குப் புரியப் போகிறது!

மீன்கள் தின்று பசியாறிய என் சு.கீணனூர் கொக்குகள், இன்று கறம்பில் மேயும் ஆடு, மாடு களின் காலடிகளில்... வெட்டுக் கிளிகள் தேடிப் பசியாறிக்கொண்டு இருக்கின்றன!''

படங்கள்: ச.தேவராஜன்


VIKATAN

ஞாயிறு, ஜனவரி 02, 2011

செருப்பைக்காட்டிய கமலுக்கு

செருப்பைக்காட்டிய கமலுக்கு எதிப்பைக்காட்டும் அறிவுமதி

"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு...

30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு...
இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம்.
மன்மதன் அம்பு.
மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு
வந்து விட்@டா@மா
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!


அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த
அம்பு...
இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை
உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால்
முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.

இந்த மன்மத அம்புவின்
வாயிலாக...
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை
இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி
செய்திருக்கிறார்.

"தமிழ் சாகுமாம்...
தமிழ் தெருப் பொறுக்குமாம்.'

வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து...
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் @பால...
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..

இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!

போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!

அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!

தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட... நீங்கள்
பெரிய்ய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!

அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!

ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!

இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்...
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!

பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்...
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.

ஆனால்
"அவன் தமிழ்
சாக வேவண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்.''

தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!

தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..

"யாதும் ஊரே யாவரும்
கேளிர்' என்று
உலகையே பெருக்கியவர்கள்
உங்கள்.
எங்களைப் பார்த்து
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்...!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்...
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.

மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற கைபேசியின் மேல்
வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.

கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறு... வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!

அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.

சீதையைப் பார்த்து
"உயிரே போகுதே'
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
"உயிரே போகுதே'
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!

அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.

அதற்கு
வருவான்
வருவான்
வருவான்
"தலைவன்
வருவான்!'
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வேவண்டாமா?

அன்புடன்
அறிவுமதி